search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை எம்.பியாக பதவி ஏற்றுக்கொண்டார் அருண் ஜெட்லி
    X

    மாநிலங்களவை எம்.பியாக பதவி ஏற்றுக்கொண்டார் அருண் ஜெட்லி

    பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். #ArunJaitley #RajyaSabhaMP

    புதுடெல்லி:

    சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு எம்.பிக்கள் நியமனம் செய்யப்பட்ட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, உடல்நிலை சரியில்லாததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சமீபத்தில் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மாநிலங்களவை எம்.பியாக இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பாராளுமன்ற வளாகத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். #ArunJaitley #RajyaSabhaMP #tamilnews
    Next Story
    ×