search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha MP"

    • மாநிலங்களவையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து அமளி எழுந்தது.
    • அப்போது காங்கிரஸ் எம்.பி. திடீரென மயக்கம் அடைந்தார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

    மேலும் நீட் தேர்வில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனையாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. 6 வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்துள்ளன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டன.

    விவாதத்தை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள். விவாதம் தொடங்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி கொடுக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட னர். இதேபோல், மாநிலங்களவையிலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

    இந்நிலையில், மாநிலங்களவை தொடங்கியதும் நீட் பற்றி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தினார். இதையடுத்து மாநிலங்களவையில் அமளி எழுந்தது. அப்போது காங்கிரஸ் எம்பியான பூலோ தேவி நீதம் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி அறிவித்தார்.
    • இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருந்ததால் போட்டியின்றி தேர்வானார்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

     சோனியா காந்தியுடன் மேலும் பலர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.

    • முதல் நாளில் இருந்தே வசூலில் அனிமல் சாதனை புரிந்து வருகிறது
    • அனிமல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என எம்.பி. விமர்சித்தார்

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.

    மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.

    "நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை. எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?" என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் "அனிமல்" திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    ×