என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை எம்பி"

    • தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவுடன் தேர்வான 4 எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மேல் சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களில் இருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை அடிப்படையில் எம்.பி.க்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் 18 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த 18 எம்.பி.க்களில் வில்சன், சண்முகம், அப் துல்லா (3 பேரும் தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), அன்புமணி (பா.ம.க.) ஆகிய 6 எம்.பி.க்களின் பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய கடந்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 12-ந்தேதி அந்த மனுக்கள் மீது பரிசீ லனை நடந்தது. போட்டி ஏற்படாததால் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் பாராளுமன்ற மேல்சபைக்கு ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார்கள்.

    அவர்களில் வில்சனுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்து எம்.பி.யாக்கி இருக்கிறது. தி.மு.க. சார்பில் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார்.

    அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் எம்.பி. பதவிக்கு நிறுத்தப்பட்டு தேர்வாகி உள்ளனர். இந்த 6 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்வானதை கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்த நிலையில் புதிதாக தேர்வான மேல்சபை எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நேற்றும், இன்றும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கமல் ஹாசன், இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் பதவி ஏற்றனர்.

    கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவுடன் தேர்வான 4 எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமை களையும் சங்கநாதமென முழங்கியவர்.

    1978-ல் முத்தமிழறிஞர் கலைஞரால் முதன்முறையாக மாநி லங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அண்ணன் வைகோவின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81-வது வயதில் மாநிலங்க ளவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

    திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்க ளின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அண்ணன் சண்முகம் ஆற்றிய பணி களுக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் என் பாராட்டு களைத் தெரி வித்துக்கொள்வதுடன், அவருடைய தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளு மன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட தம்பி எம்.எம்.அப்துல்லா, தனது பதவிப் பொறுப்பு நிறைவடையும் நாளிலும் மதநல்லிணக்க அடையாளமான கோரிக்கையை முன் வைத்தன் மூலம் கழகத்தின் வார்ப்பு என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

    சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும்-நீதிமன்றங்களில் வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண் டும் தன்னுடைய அழுத்த மான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்.

    அவருக்கும், மாநி லங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களு டைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற மேல்சபை யில் தமிழகம் சார்பில் இடம் பெற்றுள்ள 18 எம்.பி.க்க ளில் 10 பேர் தி.மு.க. எம்.பி.க்கள் ஆவார்கள். தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் எம்.பி. ஒருவரும், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் எம்.பி.யாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆதரவுடன் ஜி.கே. வாசன் எம்.பி.யாக இருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் மேல்சபைக்கு தேர்வான தர்மர் சில மாதங்களுக்கு ஓ.பி.எஸ். ஆதரவு நிலை எடுத்ததால் அவர் சுயேட்சை எம்.பி.யாக உள்ளார்.

    பாராளுமன்ற மேல்சபை தமிழக எம்.பி.க்களில் சமீபத்திய மொத்த வருகை நாட்களான 315 நாட்களில் தி.மு.க.வின் வில்சன் எம்.பி. 300 நாட்கள் சபை நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ளார். சண்முகம் 280 நாட்களும், சந்திரசேகரன் 215 நாட்க ளும், அப்துல்லா 212 நாட்க ளும் பங்கேற்றுள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 178 நாட்கள் சபை நடவடிக்கைளில் பங்கேற்றுள்ளார். மிக குறைவாக பா.ம.க. தலைவர் அன்புமணி 92 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

    • கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • வேலை நாட்கள் எண்ணிக்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசியதாவது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்

    ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • மக்களவை எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.க்கு போட்டியிட இருப்பதாக தகவல்.
    • அப்படி போட்டியிட்டால் பிரியங்கா காந்தியை ரேபரேலி தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் முடிவு.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அக்கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு முடிவடையும் எனத் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதுவரை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 77 வயதாகும் சோனியா காந்தியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் உறுதியானால் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவார்.

    சோனியா காந்தி கடந்த 2006-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வி அடைந்தாலும் சோனியா காந்தி அமைதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

    மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரியங்கா காந்தி அரசியலில் வரவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். அப்படி தேர்தலில் வந்தால் முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் விரும்புவார்கள். அதனால் ரேபரேலி தொகுதியை அவர்கள் தேர்வு செய்வார்கள்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலில் நுழைந்த பிரியங்கா காந்தி, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் எந்த தொகுதியிலும் போட்டியிடுவதில்லை என அறிவித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

    • சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
    • ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகின.

    தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான மனுத்தாக்கல் செய்ய இன்று காலை 10 மணியளவில் ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.

    ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர்.

    பின்னர் சரியாக 12 மணியளவில் ராஜஸ்தான் சட்மன்ற வளாகம் வந்தடைந்தார். அதன்பின் மாநிலங்களவை எம்.பி. போட்டிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவரது உடல்நிலை காரணமாக மாநிலங்களவை எம்.பி. ஆக முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மத்திய மந்திரிகள் இருவர் உள்பட 12 பேர் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர்.
    • மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக எல். முருகன் உள்ளார். இவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மொத்தம் 12 பேர் இன்று மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் போட்டியிடவில்லை. தற்போது ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    எல். முருகன் நீலகிரி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி அறிவித்தார்.
    • இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருந்ததால் போட்டியின்றி தேர்வானார்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

     சோனியா காந்தியுடன் மேலும் பலர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.

    ×