search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவை எம்.பி. ஆகிறாரா சோனியா காந்தி?: அப்படியானால் ரேபரேலி தொகுதியில்...
    X

    மாநிலங்களவை எம்.பி. ஆகிறாரா சோனியா காந்தி?: அப்படியானால் ரேபரேலி தொகுதியில்...

    • மக்களவை எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.க்கு போட்டியிட இருப்பதாக தகவல்.
    • அப்படி போட்டியிட்டால் பிரியங்கா காந்தியை ரேபரேலி தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் முடிவு.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அக்கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு முடிவடையும் எனத் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதுவரை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 77 வயதாகும் சோனியா காந்தியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் உறுதியானால் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவார்.

    சோனியா காந்தி கடந்த 2006-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வி அடைந்தாலும் சோனியா காந்தி அமைதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

    மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரியங்கா காந்தி அரசியலில் வரவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். அப்படி தேர்தலில் வந்தால் முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் விரும்புவார்கள். அதனால் ரேபரேலி தொகுதியை அவர்கள் தேர்வு செய்வார்கள்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலில் நுழைந்த பிரியங்கா காந்தி, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் எந்த தொகுதியிலும் போட்டியிடுவதில்லை என அறிவித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×