என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி உண்ணாவிரதம் கேலிக்கூத்து - சரித்திரத்தில் இல்லாதது: சந்திரபாபு நாயுடு ஆவேசம்
Byமாலை மலர்13 April 2018 5:18 AM GMT (Updated: 13 April 2018 5:29 AM GMT)
பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
நகரி:
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள மக்களை மோடி கஷ்டப்படுத்தி வருகிறார். எங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறேன் என்று ஏமாற்றிவிட்டார்.
மோடியை பிரதமர் ஆக்க நான் தான் முயற்சி மேற்கொண்டேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி மோடிக்கு ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்தேன்.
இப்போது மோடிக்கு எதிரான யுத்தத்தை நானே தொடங்கியுள்ளேன். நான் நினைத்தால் பா.ஜனதா கட்சியை முகவரி இல்லாமல் செய்து விடுவேன்.
நான் மோடியை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய பிறகு தான் இந்தியா முழுவதும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் மோடிக்கு எதிராக மக்கள் பேசத் தொடங்கி விட்டனர்.
மோடியின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாம் நினைத்தால் பா.ஜனதா ஆட்சியை நாட்டிலேயே இல்லாமல் செய்து விடலாம். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மோடி அடங்கி விட்டார்.
பிரதமரும் பா.ஜனதா கட்சியினரும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். ஒருநாட்டின் பிரதமர் உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது.
இவ்வாறு அவர் பேசினார்.#tamilnews
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள மக்களை மோடி கஷ்டப்படுத்தி வருகிறார். எங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறேன் என்று ஏமாற்றிவிட்டார்.
மோடியை பிரதமர் ஆக்க நான் தான் முயற்சி மேற்கொண்டேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி மோடிக்கு ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்தேன்.
இப்போது மோடிக்கு எதிரான யுத்தத்தை நானே தொடங்கியுள்ளேன். நான் நினைத்தால் பா.ஜனதா கட்சியை முகவரி இல்லாமல் செய்து விடுவேன்.
நான் மோடியை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய பிறகு தான் இந்தியா முழுவதும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் மோடிக்கு எதிராக மக்கள் பேசத் தொடங்கி விட்டனர்.
மோடியின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாம் நினைத்தால் பா.ஜனதா ஆட்சியை நாட்டிலேயே இல்லாமல் செய்து விடலாம். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மோடி அடங்கி விட்டார்.
பிரதமரும் பா.ஜனதா கட்சியினரும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். ஒருநாட்டின் பிரதமர் உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது.
இவ்வாறு அவர் பேசினார்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X