search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
    X

    டெல்லியில் சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

    டெல்லியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். #ArvindKejriwal #ChandrababuNaidu

    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. அதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளிடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்றன.

    இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய நிலையில், முதல் முதலாக அதன் தலைவரான ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார்.

    அவர் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுர், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், அ.தி.மு.க. எம்.பி., டாக்டர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பா.ஜனதா கூட்டணியில் உள்ள அப்ணாதளம் கட்சி தலைவர் அனுப்ரியா பட்டேல் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், இன்று காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #tamilnews
    Next Story
    ×