search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் ராணுவ வீரர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நரேஷ் யாதவ் இன்று தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அவரது உடலை சக வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ராணுவ வீரர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நரேஷ் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு நரேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சில மாதங்களாக ராணுவ வீரர்கள் தங்கள் சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. #kashmir #tamilnews
    Next Story
    ×