என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்த லத்வியா நாட்டுப் பெண் மாயம்
Byமாலை மலர்18 March 2018 2:34 PM GMT (Updated: 18 March 2018 2:34 PM GMT)
லத்வியா நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சை பெறுவதக்காக கேரளாவுக்கு வந்த 33 வயது பெண் கோவளம் கடற்கரை பகுதியில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Latvianwoman #kerala #missing
திருவனந்தபுரம்:
ஐரோப்பா கண்டத்தில் பால்டிக் கடல் பகுதியில் லித்வேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகளுக்கு அமைந்துள்ள லத்வியா நாட்டை சேர்ந்த லிகா(33) என்ற பெண் மனஅழுத்த நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக சில வாரங்களுக்கு முன்னர் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வந்தார். அவரது சகோதரி இல்ஸி என்பவரும் அவருக்கு துணையாக வந்திருந்தார்.
பொத்தென்கோட் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி லிகா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பிரபல சுற்றுலாதலமான கோவளம் கடற்கரையை சுற்றிப்பார்க்க விரும்பி கடந்த 14-ம் தேதி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றார்.
ஆனால், மீண்டும் அவர் மருத்துவமனைக்கு திரும்பி வராததால் இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லத்வியா நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்ததுடன், காணாமல்போன லிகாவை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews #Latvianwoman #kerala #missing
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X