search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி பள்ளியில் 74 இரட்டையர்கள் படிக்கும் அதிசயம்
    X

    திருப்பதி பள்ளியில் 74 இரட்டையர்கள் படிக்கும் அதிசயம்

    திருப்பதி கருகம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 74 இரட்டை குழந்தைகள் படித்து வருகின்றனர். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    இரட்டை குழந்தைகளை அபூர்வமாகத்தான் காண முடியும். ஆனால் திருப்பதியில் உள்ள ஒரு பள்ளியில் 74 இரட்டை குழந்தைகள் படித்து வருகின்றனர். இதுவியப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி கருகம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில்தான் 74 இரட்டைக்குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு அவர்களுக்காக இரட்டையர் தின விழா 3 வருடங்களாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நடந்த விழாவில் 74 இரட்டையர்களும் பாராட்டப்பட்டனர். இது குறித்து பள்ளியின் தாளாளர் கூறுகையில்:- இரட்டையர்களில் பலர் ஒரே விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளனர். பலர் ஒரே மாதிரியான மதிப்பெண்களையும் எடுக்கின்றனர். எங்கள் பள்ளியில் இவர்களுக்காக வருடந்தோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இப்போது கொண்டாடப்பட்ட விழாவையொட்டி அனைத்து இரட்டையர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது என்றார். #Tamilnews
    Next Story
    ×