என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்1 Jan 2018 7:43 PM GMT (Updated: 1 Jan 2018 7:43 PM GMT)
மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமரின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:
மத்திய பிரதேசம் மாநிலம் கோளாரஸ் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஷிவ்புரியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது என்னவென்றால் தாடியில் இருக்கும் முடிக்கும், வாலில் இருக்கும் முடிக்கும் உள்ள வித்தியாசம் போன்றது அது. எனவே ராகுலால் மோடியாக முடியாது என கூறினார். அவரது இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், மத்திய இணை மந்திரி நரேந்திர சிங் தோமரின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நரேந்திர சிங் தோமர் தன்னுடைய பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? மூத்த தலைவர், அதிலும் நாடாளுமன்றத்தில் பேசுபவர் ஏன் இதுபோல் மோசமான பேச்சுக்களை பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
#TamilNews
மத்திய பிரதேசம் மாநிலம் கோளாரஸ் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஷிவ்புரியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது என்னவென்றால் தாடியில் இருக்கும் முடிக்கும், வாலில் இருக்கும் முடிக்கும் உள்ள வித்தியாசம் போன்றது அது. எனவே ராகுலால் மோடியாக முடியாது என கூறினார். அவரது இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், மத்திய இணை மந்திரி நரேந்திர சிங் தோமரின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நரேந்திர சிங் தோமர் தன்னுடைய பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? மூத்த தலைவர், அதிலும் நாடாளுமன்றத்தில் பேசுபவர் ஏன் இதுபோல் மோசமான பேச்சுக்களை பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
#TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X