என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி தலைவராக வந்தால் காங்கிரஸ் பிடியில் இருந்து நாடு விடுபடும்: யோகி ஆதித்யாநாத் கிண்டல்
Byமாலை மலர்21 Nov 2017 2:40 PM GMT (Updated: 21 Nov 2017 2:40 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் அக்கட்சியின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.க.வின் நோக்கம் எளிதாக நிறைவேறிவிடும் என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.
லக்னோ:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. சோனியா காந்தி தற்போது வகித்துவரும் அப்பதவியில் ராகுல் காந்தியை அமர்த்த வேண்டும் என அக்கட்சியினர் இடையே பரவலான கருத்தொற்றுமை நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமை பதவிக்கான தேர்தல் தொடர்பாக எழும்பிவரும் செய்திகள் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் அக்கட்சியின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.க.வின் நோக்கம் எளிதாக நிறைவேறிவிடும் என கூறியுள்ளார்.
கோரக்பூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்த யோகி ஆதித்யாநாத், காங்கிரஸ் கட்சியை பரம்பரை வாரிசுகளின் தலைமை கொண்ட கட்சி என்று குற்றம்சாட்டினார். அந்த கட்சியில் சோனியா காந்தியை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் ஆவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என தெரிவித்த அவர் இதுதொடர்பாக இவ்வளவு பெரிய கூக்குரல் தேவையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம் என மோடி எழுப்பிய முழக்கம் வெகு சுலபமாக நிறைவேறி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. சோனியா காந்தி தற்போது வகித்துவரும் அப்பதவியில் ராகுல் காந்தியை அமர்த்த வேண்டும் என அக்கட்சியினர் இடையே பரவலான கருத்தொற்றுமை நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமை பதவிக்கான தேர்தல் தொடர்பாக எழும்பிவரும் செய்திகள் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் அக்கட்சியின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.க.வின் நோக்கம் எளிதாக நிறைவேறிவிடும் என கூறியுள்ளார்.
கோரக்பூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்த யோகி ஆதித்யாநாத், காங்கிரஸ் கட்சியை பரம்பரை வாரிசுகளின் தலைமை கொண்ட கட்சி என்று குற்றம்சாட்டினார். அந்த கட்சியில் சோனியா காந்தியை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் ஆவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என தெரிவித்த அவர் இதுதொடர்பாக இவ்வளவு பெரிய கூக்குரல் தேவையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம் என மோடி எழுப்பிய முழக்கம் வெகு சுலபமாக நிறைவேறி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X