என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் போலீசார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
Byமாலை மலர்10 Nov 2017 10:54 AM GMT (Updated: 10 Nov 2017 10:54 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ளது காசிகுண்ட் பகுதி. இங்குள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு போலீசாரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ரோந்து சென்ற போலீசார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X