என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவிலும் பொங்கலுக்கு இலவச வேட்டி - சேலை: சந்திரபாபுநாயுடு அரசு முடிவு
Byமாலை மலர்8 Aug 2017 5:45 AM GMT (Updated: 8 Aug 2017 5:45 AM GMT)
தமிழகத்தை போல், ஆந்திராவிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க சந்திர பாபுநாயுடு அரசு முடிவு செய்து இருக்கிறது.
நகரி:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திராவிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க சந்திர பாபுநாயுடு அரசு முடிவு செய்து இருக்கிறது.
ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, வெல்லம், போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகையில் இருந்து இலவச வேட்டி- சேலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. சுமார் 75 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.
இதுகுறித்து அமராவதியில் நடந்த கைத்தறி தின விழாவில் கலந்து கொண்ட மந்திரி அச்சம் நாயுடு கூறுகையில், வரும் பொங்கல் பண்டிகையில் இருந்து ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. இதற்காக நெசவாளர்களிடம் இருந்து கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்படும். நெசவாளர்கள் விற்றது போக மீதமுள்ள கைத்தறி துணிகள் இலவச வேட்டி- சேலைகளுக்காக வாங்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திராவிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க சந்திர பாபுநாயுடு அரசு முடிவு செய்து இருக்கிறது.
ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, வெல்லம், போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகையில் இருந்து இலவச வேட்டி- சேலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. சுமார் 75 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.
இதுகுறித்து அமராவதியில் நடந்த கைத்தறி தின விழாவில் கலந்து கொண்ட மந்திரி அச்சம் நாயுடு கூறுகையில், வரும் பொங்கல் பண்டிகையில் இருந்து ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. இதற்காக நெசவாளர்களிடம் இருந்து கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்படும். நெசவாளர்கள் விற்றது போக மீதமுள்ள கைத்தறி துணிகள் இலவச வேட்டி- சேலைகளுக்காக வாங்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X