search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 323 இடங்களில் பணப்பட்டுவாடா
    X

    சென்னையில் 323 இடங்களில் பணப்பட்டுவாடா

    சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சத்தமில்லாமல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை பதட்டமான இடங்கள் என்று அறிவித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #LokSabhaElections2019

    Next Story
    ×