search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது: பிரேமலதா
    X

    தேமுதிக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது: பிரேமலதா

    தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது என்று தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    ஆலந்தூர் :

    சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தே.மு.தி.க. பின்பற்றும். 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை.

    பல தேர்தல்களை பார்த்து விட்டோம். தேர்தல் அறிக்கைகளை பார்த்து விட்டோம். ஆனால் உறுதியாக இந்த முறை கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுமாறு மத்திய அரசிடம் தே.மு.தி.க. வலியுறுத்தும். தமிழகத்திற்கு தேவையானதை உறுதியாக எடுத்துரைப்போம். தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பிரதமர், முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.



    மத்திய மந்திரிசபையில் தே.மு.தி.க. சேருவது பற்றி யோசிக்கவில்லை. தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். யார் யார் வெற்றி பெற உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் தான் மந்திரிசபையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்.

    தூத்துக்குடியில் 2 பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது. வரவேற்கக்கூடியது. அரசியலுக்கு பெண்கள் அதிகமாக வர வேண்டும். இதில் யார் பலமானவர்? என்று சொல்ல முடியாது. 2 பேரும் நல்ல வேட்பாளர்கள். உழைக்கக்கூடியவர்கள். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இதில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.

    தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். விஜயகாந்த் முகத்தை காட்டினாலே போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். வருகிற 27-ந் தேதி முதல் 40 தொகுதிகளிலும் நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    Next Story
    ×