search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளிப்பு
    X

    திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளிப்பு

    திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச் சிற்றம்பலம் கூட்டு ரோடு சப்தகிரி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். டிரைவர். இவரது மனைவி அமுதமொழி (வயது 32).

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே ஆறுமுகத்துக்கும், அவரது மனைவி அமுதமொழிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அமுதமொழி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதமொழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×