search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் சோகம்: சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் காயம்
    X

    தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் சோகம்: சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் காயம்

    திண்டுக்கல் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 29). கார் டிரைவர். இவர் சசிகலா (39) என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேற்று நள்ளிரவு ஊராளிப்பட்டி பிரிவில் கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. அவ்வழியே வந்தவர்கள் படுகாயமடைந்த பிரபு மற்றும் சசிகலாவை மீட்டு திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வெளியூருக்கு செல்லும் மக்களும் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களும் அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பல நேரங்களில் உயிரிழப்பும் நடந்து வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த சாலையில் பல விபத்துகள் இது போல நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அடிக்கடி முகாமிட்டு அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    Next Story
    ×