search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் திருவிழாவில் பெண்களை கிண்டல் செய்ததால் மோதல் - 4 பேர் காயம்
    X

    கோவில் திருவிழாவில் பெண்களை கிண்டல் செய்ததால் மோதல் - 4 பேர் காயம்

    கோவில் திருவிழாவில் பெண்களை கிண்டல் செய்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செஞ்சி பனம்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த வாரம் ஜாத்திரை திருவிழா நடந்தது.

    அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை செஞ்சி பனம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்த பாலகுமார், நாகராஜ், அப்பாஸ், கார்த்திக் ஆகியோர் கிண்டல் செய்தனர்.

    இது தொடர்பாக செஞ்சி பனம்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செஞ்சி பனம்பாக்கம் காலனியை சேர்ந்த சிலர் நேற்று செஞ்சி பனம்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டனர்.

    திடீரென்று அவர்கள் அங்கிருந்த 4 வீடுகளை அடித்து நொறுக்கினார்கள். அப்போது செந்தில், சரவணன், அம்சம்மா, மாரி ஆகியோர் தடுக்க முயன்றனர்.

    அப்போது அவர்கள் தாக்கப்பட்டார்கள். படுகாயம் அடைந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள்.

    இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×