search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் சாணிப்பவுடர் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
    X

    பொள்ளாச்சியில் சாணிப்பவுடர் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

    பொள்ளாச்சியில் சாணிப்பவுடர் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகள் அனிதா (வயது 18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனிதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×