search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் தகராறு - மகளுடன் மாயமான பெண் - சென்னையில் மீட்பு
    X

    கணவருடன் தகராறு - மகளுடன் மாயமான பெண் - சென்னையில் மீட்பு

    பெரியபாளையம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளுடன் மாயமான பெண் சென்னையில் மீட்கப்பட்டார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தூட்டார் தெருவைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (38). ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (31). இவர்களுக்கு 9 வயது, 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் பாக்யராஜூக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், கடைக்கு வந்த பாக்யராஜ் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் 9 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார். குழந்தையிடம் பாக்யராஜ் விசாரித்தபோது ஜெயலட்சுமி தனது 2-வது மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றதாக கூறினார்.

    இதனால் ஜெயலட்சுமியையும் தனது மகளையும், பாக்யராஜ் உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தருமாறு பாக்யராஜ் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது, ஜெயலட்சுமி சென்னை அனகாபுத்தூரில் இருப்பதை போலீசார் அறிந்து விரைந்து சென்றனர். கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது சித்தி வீட்டிற்கு ஜெயலட்சுமி வந்ததை போலீசார் அறிந்தனர்.

    பின்னர், ஜெயலட்சுமியையும் அவரது மகளையும் மீட்டு ஆரணிக்கு அழைத்து வந்து பாக்யராஜிடம் ஒப்படைத்தனர். கணவன்- மனைவிக்கு போலீசார் அறிவுரை வழங்கி சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×