search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்படிப்பை தொடர முடியாத வேதனையில் பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை
    X

    மேற்படிப்பை தொடர முடியாத வேதனையில் பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை

    மேற்படிப்பை தொடர முடியாத வேதனையில் பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    விழுப்புரம்:

    வானூர் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோதெய்வம் மகள் ராணி (வயது 19). இவர் பி.ஏ. படித்து முடித்துள்ளார்.

    இவருடைய தந்தை ஆரோதெய்வம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு இவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த ராணியால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.

    இதனால் ராணி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராணி, விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×