என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்படிப்பை தொடர முடியாத வேதனையில் பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்14 May 2019 6:25 PM GMT (Updated: 14 May 2019 6:25 PM GMT)
மேற்படிப்பை தொடர முடியாத வேதனையில் பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்:
வானூர் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோதெய்வம் மகள் ராணி (வயது 19). இவர் பி.ஏ. படித்து முடித்துள்ளார்.
இவருடைய தந்தை ஆரோதெய்வம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு இவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த ராணியால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.
இதனால் ராணி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராணி, விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோதெய்வம் மகள் ராணி (வயது 19). இவர் பி.ஏ. படித்து முடித்துள்ளார்.
இவருடைய தந்தை ஆரோதெய்வம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு இவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த ராணியால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.
இதனால் ராணி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராணி, விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X