search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரகனூர், கெங்கவல்லியில் 2-வது நாளாக கன மழை
    X

    வீரகனூர், கெங்கவல்லியில் 2-வது நாளாக கன மழை

    சேலம் மாவட்டத்தில் வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் 2-வது நாளாக கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வீரகனூர், கெங்கவல்லி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    2-வது நாளாக நேற்றிரவு வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சங்ககிரி தம்மம்பட்டி, பெத்த நாயக்கன் பாளையம், கரியகோவில் ஆகிய பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது.

    இன்று காலையும் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் இந்த தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வீரகனூரில் 46 மி.மீ, கெங்கவல்லி 45.4, சங்ககிரி 14.3, தம்மம்பட்டி 11.2, பெத்தநாயக்கன் பாளையம் 7, கரியகோவில் 6, வாழப்பாடி 5, எடப்பாடி 4, ஆத்தூர் 2.4, ஆனைமடுவு 2, சேலம் 0.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×