என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே திருட்டை தடுத்த காவலாளி மீது தாக்குதல்
Byமாலை மலர்6 May 2019 11:32 AM GMT (Updated: 6 May 2019 11:32 AM GMT)
பெரியகுளம் அருகே திருட்டை தடுத்த காவலாளியை தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் கும்பக்கரை அருகே உள்ள முருக மலையில் பரவுக்காவல் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவருடன் அழகர், அய்யர் ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது இரவு நேரத்தில் அவ்வழியாக ஒரு கார் வந்தது. லாரியில் வந்த கும்பல் மாந்தோப்புக்குள் புகுந்து மாங்காய்களை பறித்தனர். இதனை குமார் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் குமாரை தாக்கி மிரட்டினர்.
இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்த கும்பலிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, பாரதிநகரைச் சேர்ந்த முனீஸ்வரன், ரவீந்திரன், மருதுபாண்டி என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X