என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடி அருகே குடும்ப தகராறில் தாயை குத்தி கொல்ல முயன்ற மகன் கைது
மேலசொக்கநாதபுரம்:
போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (வயது 40). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி பழனிமுத்து. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஈஸ்வரன் ஜவுளி வியாபாரத்திற்காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவது வழக்கம் அப்போது பழனிமுத்துவுக்கும், அவரது மாமியார் தனம் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழனி முத்து கோபித்துக்கொண்டு பொம்மிநாயக்கன் பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். விசாரணைக்காக ஈஸ்வரனை போலீசார் வரச்சொல்லியிருந்தனர். ஈஸ்வரன் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்வதற்காக தனது தாயாரை அழைத்தார். உன்னால் தான் என் மனைவி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை அழைத்து வரலாம் என்றார். ஆனால் தனம் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன், அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது தாய் என்றும் பார்க்காமல் பல இடங்களில் குத்தினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்த ஈஸ்வரனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்