என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி தென்னூரில் பைனான்சியர் மனைவியிடம் 6 பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்2 May 2019 2:43 PM GMT (Updated: 2 May 2019 2:43 PM GMT)
தென்னூரில் உக்கிரமாகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பைனான்சியர் மனைவியிடம் 6 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருச்சி:
திருச்சி தில்லைநகர் 11- வது குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்தவர் காசிநாதன், பைனான்சியர். இவரது மனைவி வள்ளிக்கண்ணு (வயது 47).
இவர் நேற்று மாலை தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். திடீரென இருவரும் வள்ளிக்கண்ணுவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து அவர் தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மருதுபாண்டி (வயது 21). அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று பெரியகடை வீதி சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த லியாகத் அலி மகன் மாலிக் பாட்ஷா (வயது 21) அவரிடம் இருந்த செல்போனை பறித்தார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்து, காந்தி மார்க்கெட் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாலிக் பாட்ஷாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X