search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை
    X

    மதுரையில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை

    மதுரையில் டாஸ்மாக் பார் ஊழியர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை அனுப்பானடி சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜா (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மதிச்சியம், காந்திநகர் பகுதியில் மோகன்ராஜா உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோகன்ராஜா உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×