search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்
    X

    கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்

    தேனி அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் உடுமஞ்சோலையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மகள் ரம்யா ஓடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கம்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் ரம்யா திரும்பாததால் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×