search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்களிடம் நகை கொள்ளை
    X

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்களிடம் நகை கொள்ளை

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்களிடம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி தவமணி தேவி (வயது 79). இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி ஷேர் ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், தவமணி தேவி வைத்திருந்த ஒரு பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டு பாவா வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி குல்பத்நிஷா (வயது 40). இவர் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு வந்திருந்தார்.

    அன்று காளவாசலில் இருந்து மாட்டுத்தாவணிக்கு குல்பத்நிஷா ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி குல்பத் நிஷாவிடம் இருந்த 4 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    மேற்கண்ட 2 சம்பவங்கள் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் தற்போது தான் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×