என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்களிடம் நகை கொள்ளை
மதுரை:
மதுரை அண்ணாநகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி தவமணி தேவி (வயது 79). இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி ஷேர் ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், தவமணி தேவி வைத்திருந்த ஒரு பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டு பாவா வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி குல்பத்நிஷா (வயது 40). இவர் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு வந்திருந்தார்.
அன்று காளவாசலில் இருந்து மாட்டுத்தாவணிக்கு குல்பத்நிஷா ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி குல்பத் நிஷாவிடம் இருந்த 4 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார்.
மேற்கண்ட 2 சம்பவங்கள் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் தற்போது தான் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்