என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சிற்றம்பலம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, மகன் ரமேஷ் (வயது 44). இவர் திருச்சிற்றம்பலம் மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு ரமேஷ் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். துறவிக்காடு சாலையில் உள்ள கட்டாச்சிக் குண்டு என்ற இடம் வந்தபோது ஒரு லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். பலியான ரமேசுக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மல்லிகா கொடுத்த புகாரின், பேரில் திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்ட லாரியை கண்டு பிடிக்கும் முயற்சியில் திருச்சிற்றம்பலம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்