என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 April 2019 11:40 AM GMT (Updated: 3 April 2019 11:40 AM GMT)
சேலம் அருகே டைல்ஸ் ஒட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சித்தூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 39). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.
இவர் தொழில் சம்பந்தமாக தாரமங்கலம் அருகே உள்ள கீரபாப்பம்பாடி பகுதிக்கு வந்தபோது, அம்பிகா என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார், தான் வேலை செய்த இடத்தில் சம்பள தொகை ரூ.7 ஆயிரம் வாங்கிக்கொண்டு வந்தார். இந்த பணத்தை மனைவியிடம் குடும்ப நடத்த கொடுக்கவில்லை என தெரிகிறது. அந்த பணத்தை குமார் செலவு செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்பிகா சத்தம் போட்டார்.
இதில் மனம் உடைந்த குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தந்தை காணாததை பற்றி மகன் அருள் (12), மகள் கீர்த்தி (10) ஆகியோர் தாத்தா பொன்னுசாமியிடம் தெரிவித்தனர். அவர் கீரபாப்பம்பாடிக்கு வந்து மகனை பற்றி விசாரித்தபோது காங்கானியூர் குட்டிக்கரடு என்ற இடத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்னுசாமி அங்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு மரத்தில் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சின்னுசாமி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று குமார் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சித்தூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 39). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.
இவர் தொழில் சம்பந்தமாக தாரமங்கலம் அருகே உள்ள கீரபாப்பம்பாடி பகுதிக்கு வந்தபோது, அம்பிகா என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார், தான் வேலை செய்த இடத்தில் சம்பள தொகை ரூ.7 ஆயிரம் வாங்கிக்கொண்டு வந்தார். இந்த பணத்தை மனைவியிடம் குடும்ப நடத்த கொடுக்கவில்லை என தெரிகிறது. அந்த பணத்தை குமார் செலவு செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்பிகா சத்தம் போட்டார்.
இதில் மனம் உடைந்த குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தந்தை காணாததை பற்றி மகன் அருள் (12), மகள் கீர்த்தி (10) ஆகியோர் தாத்தா பொன்னுசாமியிடம் தெரிவித்தனர். அவர் கீரபாப்பம்பாடிக்கு வந்து மகனை பற்றி விசாரித்தபோது காங்கானியூர் குட்டிக்கரடு என்ற இடத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்னுசாமி அங்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு மரத்தில் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சின்னுசாமி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று குமார் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X