search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை பீளமேட்டில் மண்ணில் புதைந்து வடமாநில தொழிலாளி பலி
    X

    கோவை பீளமேட்டில் மண்ணில் புதைந்து வடமாநில தொழிலாளி பலி

    கோவை பீளமேட்டில் மண்ணில் புதைந்து வடமாநில தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதுன் மஞ்சித் (30). இவர் கடந்த 3 மாதமாக கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள காஸ்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எந்திர பிளேட் உடைந்து 7 அடி ஆழ குழிக்குள் மிதுன் மஞ்சித் தவறி விழுந்தார். அவரை மணல் மூடியது. இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணலை அகற்றி மிதுன் மஞ்சித்தை மீட்க முயன்றனர். ஆனால் அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தான் மீட்க முடிந்தது.

    இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியதாக சூப்பர்வைசர் கருப்பசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×