search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை
    X

    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்டூடியோவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நண்பகலில் ஸ்டூடியோவில் தூக்கிட்டு காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    டவுன் போலீசார் காயத்ரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்பு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் காயத்ரியின் தந்தை ஆறுமுகம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் ஒரு மனு அளித்தார். அதில், எனது மகள் தற்கொலையில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை. மகளின் சாவில் முறையான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×