search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசியில் பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    தென்காசியில் பஸ் மோதி தொழிலாளி பலி

    தென்காசியில் பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது55). விவசாய தொழிலாளி. இவர் மொபட்டில் தென்காசி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த பஸ் மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தேன்பொத்தையை சேர்ந்த பஸ் டிரைவர் அருணாசலம் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×