என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்
Byமாலை மலர்4 March 2019 10:02 AM GMT (Updated: 4 March 2019 10:02 AM GMT)
அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்திகரை கிராமத்தை சேர்ந்தவர் தப்பகுளியப்பா (வயது 50).
இவர் நேற்று மாடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாலை வேளையில் ஒன்றை யானை அந்த பகுதிக்கு வந்துள்ளது. அதை பார்த்து பயந்து ஒடியுள்ளார். உடனே யானை தப்பகுளியப்பாவை துரத்தி துதிக்கையால் தாக்கி வீசியது. பின்னர் அங்கிருந்து சென்றது. தலையில் பலத்து அடிபட்டு ரத்த வெள்ளத்தில் தப்பகுளியப்பா துடிதுடித்துள்ளார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X