search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்
    X

    அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்

    அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்திகரை கிராமத்தை சேர்ந்தவர் தப்பகுளியப்பா (வயது 50).

    இவர் நேற்று மாடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாலை வேளையில் ஒன்றை யானை அந்த பகுதிக்கு வந்துள்ளது. அதை பார்த்து பயந்து ஒடியுள்ளார். உடனே யானை தப்பகுளியப்பாவை துரத்தி துதிக்கையால் தாக்கி வீசியது. பின்னர் அங்கிருந்து சென்றது. தலையில் பலத்து அடிபட்டு ரத்த வெள்ளத்தில் தப்பகுளியப்பா துடிதுடித்துள்ளார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

    பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×