என் மலர்
நீங்கள் தேடியது "farmer injured"
- ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வெளிவருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
சில நேரங்களில் மனித உயிருக்கும் ஆபத்தை விளை விக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இரவு நேர காவலில் இருந்த விவசாயியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றிய விபரம் வருமாறு:- தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு சாமி (வயது 55). விவசாயி.
இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இக்கலூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரத்தில் தங்களது தோட்டங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவு பிரபு சாமி தனது கரும்பு தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்துள்ளார். அப்போது அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் பிரபுசாமி கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது.
திடீரென யானை தோட்டத்திற்குள் வந்ததால் அதிர்ச்சியடைந்த பிரபு சாமி அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் ஒற்றை யானை அவரை தாக்கியது. இதில் இரு கால்களில் பலத்த காயம் அடைந்த பிரபு சாமி வலியால் அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பின்னர் யானை தாக்கி படுகாயம் அடைந்த பிரபு சாமியை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபு சாமி கோவை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
- விவசாயியின் கால் பகுதியில் காட்டு மாடு கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுபன்றி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.
குறிப்பாக காட்டெருமை நகர் பகுதியில் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த காட்டெருமை கூட்டம் நகர்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமை தாக்கி உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). இன்று காலை தனது தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக சென்றுள்ளார்.அப்போது பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
அப்பகுதியில் கடந்த 15 நாட்களாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டெருமை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.அதனை விரட்ட முயற்சி செய்தபோது விவசாயி மனோகரனை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் கால் பகுதியில் கடுமையாக தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.சம்பவம் அறிந்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- யானை ஒன்று வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
- யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்ன குட்டஹள்ளி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராஜ். இவரது மகன் செல்வகுமார், இவர் அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அடிக்கடி ஒற்றை யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்படுத்தி விட்டு விவசாயி தூங்கி கொண்டிருந்த போது விவசாயியை தாக்கியுள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் இதனைக் கண்டு சத்த மிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து அங்கிருந்து யானையை விரட்டி அடித்தனர்.
பின்னர் காயம் அடைந்த விவசாயியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தனியார் பஸ் மீது பைக் மோதியது
- போலீசார் விசாரணை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிரா மத்தை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 45 ) , ஆதி மூலம் மகன் அருண் . விவசாயி . இவர்கள் இருவரும் கலவையில் இருந்து வேம்பிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர் . கலவையை அடுத்த அருந்ததிபாளையம் அருகே சென்றபோது லோகநாதன் ஓட்டிச் சென்ற பைக் தனியார் பஸ் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப் பட்டனர் . அவர்களில் அருணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து , மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து கலவை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புக்காட்டில் ஏராளமான யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று 75-க்கும் மேற்பட்ட யானைகளை விரட்டும்போது அந்த யானை கூட்டத்தில் இருந்து ஒற்றை யானை பிரிந்து வந்தது.
அந்த யானை நொகனூர் அருகே விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த நொகனூர் கிராமத்தை சேர்ந்த பைரப்பா (வயது55) என்ற விவசாயியை துரத்தியது. யானையிடம் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடினார். அப்போது கீழே விழுந்து தலை, கை கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்த யானை அவரை தாக்காமல் திரும்பி சென்று விட்டது.
காயம் அடைந்த விவசாயி பைரப்பா தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம், வனக்காப்பாளர்கள் ஆறுமுகம், ஆனுசாமி ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.






