search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே சூதாடிய 3 பேர் கைது
    X

    தருமபுரி அருகே சூதாடிய 3 பேர் கைது

    தருமபுரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய தருமபுரி அடுத்துள்ள கொளகத்தூர் ஏரிகரையில் 3 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். 

    இதனை பார்த்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழைய தருமபுரியை சேர்ந்த ஆனந்தன், கோபி மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இவர்களிடம் இருந்து ஒரு சீட்டு கட்டு மற்றும் ரூ.2,520 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×