என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பூரில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
பெரம்பூர்:
பெரம்பூர் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவரது மனைவி மணி. கடந்த 10-ந் தேதி இவர் அதே பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த மர்ம வாலிபர் மணியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் தயாராக நின்ற கூட்டாளியுடன் தப்பிச் சென்றுவிட்டான்.
இது குறித்து செம்பியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
கொள்ளை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது மணியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி அன்னை சத்யாநகரை சேர்ந்த திருஷ்ணன், பி.வி. காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான கிருஷ்ணனும், பிரகாசும் வண்ணாரப்பேட்டையில் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். உல்லாச செலவு செய்வதற்காக நகை பறிப்பில்ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து இருக்கி றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்