என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம் அருகே மதுவில் தண்ணீர் கலந்து விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்3 Feb 2019 7:10 AM GMT (Updated: 3 Feb 2019 7:10 AM GMT)
மதுராந்தகம் அருகே மதுவில் தண்ணீர் கலந்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூரில் உள்ள சூரியன் காடு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதன் அருகே சிலர் அனுமதியின்றி மது பார் நடத்தி வருவதாகவும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதில் தண்ணீரை கலந்து விற்பனை செய்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் சூரியன்காடு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி மதுபார் நடத்தி வந்ததும் மதுவில் தண்ணீர் கலந்து விற்றதும் தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 370 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சையை சேர்ந்த திவாகர், மணிகண்டன், ராகுல், சிவகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X