என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை
Byமாலை மலர்2 Feb 2019 8:11 AM GMT (Updated: 2 Feb 2019 8:11 AM GMT)
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #EdappadiPalaniswami
சேலம்:
சேலம் கந்தம்பட்டியில் நடந்த புதிய பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள், சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் போன்றவை எந்த நிலையில் உள்ளது? மற்றும் எவ்வாறு நடைபெற்று வருகிறது? என அதிகாரிகளிடம் கேட்டார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் இந்த பணிகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், நலத்திட்டங்களுக்கான அனைத்து வசதிகளும் அரசு சார்பில் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி மற்றும் வருவாய் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #TNCM #EdappadiPalaniswami
சேலம் கந்தம்பட்டியில் நடந்த புதிய பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள், சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் போன்றவை எந்த நிலையில் உள்ளது? மற்றும் எவ்வாறு நடைபெற்று வருகிறது? என அதிகாரிகளிடம் கேட்டார்.
அப்போது ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கமாக கூறினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி மற்றும் வருவாய் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #TNCM #EdappadiPalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X