என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது
Byமாலை மலர்1 Feb 2019 2:09 AM GMT (Updated: 1 Feb 2019 2:09 AM GMT)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன. #Metturdam
மேட்டூர் :
மேட்டூர் அணையின் மூலம் பயன்பெறும் டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் மாறி, மாறி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 28-ந் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதாவது வினாடிக்கு 200 கனஅடிக்கு கீழ் நீர்வரத்து குறைந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 8-ந் தேதி 80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 70.74 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன. #Metturdam
மேட்டூர் அணையின் மூலம் பயன்பெறும் டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் மாறி, மாறி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 28-ந் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதாவது வினாடிக்கு 200 கனஅடிக்கு கீழ் நீர்வரத்து குறைந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 8-ந் தேதி 80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 70.74 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன. #Metturdam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X