search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பொள்ளாச்சி தர்மராஜா காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தமிழ்மணி (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். தமிழ்மணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவவு செய்து தமிழ்மணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×