search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




    திருவாரூர்:

    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், கலைமணி, குமாரராஜா, கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×