search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அழகாபுரத்தில் பழக்கடையில் கொள்ளை
    X

    சேலம் அழகாபுரத்தில் பழக்கடையில் கொள்ளை

    சேலம் அழகாபுரத்தில் பழக்கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இதன் அருகே எஸ்.எஸ். பழக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் நேற்று வியாபாரத்தை முடித்த ஊழியர்கள் வழக்கம் போல கடையை பூட்டி சென்றனர்.

    இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த கடை ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கடை உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கல்லாவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்ற விவரத்தை அவர் சொல்ல மறுத்து விட்டார். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் துணிகர கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×