என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு அடமான பத்திரத்தை மீட்க முடியாததால் ஈரோடு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்22 Jan 2019 11:23 AM GMT (Updated: 22 Jan 2019 11:23 AM GMT)
கவுந்தப்பாடி அருகே வீட்டு அடமான பத்திரத்தை மீட்க முயாடிததால் மனவேதனை அடைந்த தொழிலாளி விணம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (37). மனைவி பெயர் சாந்தி (34) இவர்களுக்கு அஞ்சலி, பிரவீன் ஆகிய மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சரவணன் சொந்த ஊர் செந்தாம்பாளையம் என்றாலும் தற்போது ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வசித்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ஈரோடு மார்கெட்டில் பூண்டு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணி செய்கிறார். மனைவி சாந்தி தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் தையல் வேலைக்கு செல்கிறார்.
சரவணன் ஒரு வருடத்திற்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவானது. பணத்திற்காக செந்தாம்பாளையத்தில் உள்ள சொந்தவீட்டை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களாக வீட்டை மீட்க முடியவில்லையே என மன வருத்தப்பட்டு வந்த சரவணன் மனைவியிடம் பணத்தை புரட்டி வீட்டு பத்திரத்தை மீட்டு வருவதாக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு செந்தாம்பாளையம் வந்தார்.
சரவணனால் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே புரட்ட முடிந்தது. மீதி தொகை புரட்ட முடியாமல் வேதனை அடைந்த சரவணன் தனது மனைவி சாந்திக்கு போன் செய்து தன்னால் பணம் புரட்ட முடியவில்லை. செந்தாம்பாளையத்திற்கு கிளம்பி வருமாறு கூறினார்.
பிறகு விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சரவணனை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்தார்.
ஈரோட்டில் இருந்து கணவன் போன் செய்தார் என்று மகன் மகளுடன் புறப்பட்டு வந்த சாந்தி செந்தாம்பாளையம் சென்று பார்த்துவிட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் கணவர் சேர்க்கபட்டிருப்பதாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
அங்கு கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (37). மனைவி பெயர் சாந்தி (34) இவர்களுக்கு அஞ்சலி, பிரவீன் ஆகிய மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சரவணன் சொந்த ஊர் செந்தாம்பாளையம் என்றாலும் தற்போது ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வசித்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
ஈரோடு மார்கெட்டில் பூண்டு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணி செய்கிறார். மனைவி சாந்தி தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் தையல் வேலைக்கு செல்கிறார்.
சரவணன் ஒரு வருடத்திற்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவானது. பணத்திற்காக செந்தாம்பாளையத்தில் உள்ள சொந்தவீட்டை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களாக வீட்டை மீட்க முடியவில்லையே என மன வருத்தப்பட்டு வந்த சரவணன் மனைவியிடம் பணத்தை புரட்டி வீட்டு பத்திரத்தை மீட்டு வருவதாக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு செந்தாம்பாளையம் வந்தார்.
சரவணனால் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே புரட்ட முடிந்தது. மீதி தொகை புரட்ட முடியாமல் வேதனை அடைந்த சரவணன் தனது மனைவி சாந்திக்கு போன் செய்து தன்னால் பணம் புரட்ட முடியவில்லை. செந்தாம்பாளையத்திற்கு கிளம்பி வருமாறு கூறினார்.
பிறகு விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சரவணனை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்தார்.
ஈரோட்டில் இருந்து கணவன் போன் செய்தார் என்று மகன் மகளுடன் புறப்பட்டு வந்த சாந்தி செந்தாம்பாளையம் சென்று பார்த்துவிட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் கணவர் சேர்க்கபட்டிருப்பதாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
அங்கு கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X