என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்20 Jan 2019 6:11 PM GMT (Updated: 20 Jan 2019 6:11 PM GMT)
சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய சொகுசு காரை கடந்த ஜூன் மாதம் அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சிறை வார்டன் மாதேஸ் (வயது 28), அவருடைய நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக எரித்துள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் நரசோதிப்பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருடைய சொகுசு காரையும் மாதேஸ், விக்னேஷ் ஆகியோர் எரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே மாதேஸ் சிறை வார்டனாக பணி புரிந்துக்கொண்டு குற்றங்களில் ஈடுபட்டதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த மாதேஸ் கடந்த டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகளுடன் இரும்பாலை பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் அந்த வழியாக வந்த நாமக்கல் மாவட்டம் களங்காணியை சேர்ந்த ரங்கசாமி என்பவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.1,200 மற்றும் கைகெடிகாரத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சூரமங்கலம் போலீசார் மாதேஸ், கார்த்திக், சத்தியநாராயணா ஆகியோரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த முன்னாள் சிறை வார்டன் மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூரமங்கலம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள மாதேசிடம் போலீசார் வழங்கினார்.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய சொகுசு காரை கடந்த ஜூன் மாதம் அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சிறை வார்டன் மாதேஸ் (வயது 28), அவருடைய நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக எரித்துள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் நரசோதிப்பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருடைய சொகுசு காரையும் மாதேஸ், விக்னேஷ் ஆகியோர் எரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே மாதேஸ் சிறை வார்டனாக பணி புரிந்துக்கொண்டு குற்றங்களில் ஈடுபட்டதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த மாதேஸ் கடந்த டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகளுடன் இரும்பாலை பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் அந்த வழியாக வந்த நாமக்கல் மாவட்டம் களங்காணியை சேர்ந்த ரங்கசாமி என்பவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.1,200 மற்றும் கைகெடிகாரத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சூரமங்கலம் போலீசார் மாதேஸ், கார்த்திக், சத்தியநாராயணா ஆகியோரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த முன்னாள் சிறை வார்டன் மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூரமங்கலம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள மாதேசிடம் போலீசார் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X