search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூரில் பஸ் கண்டக்டர் கொலை - போலீசார் விசாரணை
    X

    போரூரில் பஸ் கண்டக்டர் கொலை - போலீசார் விசாரணை

    போரூரில் பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    போரூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது45). ஐயப்பந்தாங்கல் பணிமனையில் மாநகர பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் நண்பருடன் வெளியே சென்ற மதிவாணன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதிவாணன் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மதிவாணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று முன் தினம் முன்பு மதிவாணன் நண்பர் ஒருவருடன் போரூர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றதும், அங்கு ஏற்பட்ட தகராறில் அவர் கொடூரமாக தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

    மதிவாணனுடன் சென்ற நண்பர் யார் என்று தெரியவில்லை. அவர் மதிவாணனை கொலை செய்து தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    இதற்கிடையே அப்பகுயில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளி உருவம் பதிவாகி உள்ளது. அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக்கறை படித்த சட்டையை கழற்றி விட்டு புதிய சட்டையை மாற்றிக் கொண்டு செல்கிறார்.

    மேலும் மதிவாணனின் செல்போனையும் கொலையாளி எடுத்துச்சென்று உள்ளார். இதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    முன்விரோதம் காரணமாக மதிவாணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×