search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலி
    X

    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலியானார். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. சுடிதார் அணிந்திருந்தார். திருமணம் ஆகாதவர் போல் இருந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×