search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 3¾ லட்சத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர்
    X

    ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 3¾ லட்சத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர்

    சென்னை கோயம்பேட்டில் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.3¾ லட்சம் பணத்தை டிரைவர் பயணியிடம் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.
    போரூர்:

    தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அசாருதீன். இவர் புதிய கார் வாங்குவதற்காக சென்னைக்கு வந்தார். கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்துடன் ஆட்டோவில் ரோகிணி தியேட்டர்எதிரே உள்ள கார் ஷோரூமுக்கு சென்றார்.

    ஆட்டோவில்இருந்து இறங்கி பார்த்த போது பணப் பையை காணவில்லை. இதுபற்றி புகார் கொடுப்பதற்காக முகமது அசாருதீன் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு ஏற்கனவே பணப்பையை உரியவரிடம் ஒப்பதற்காக அவர் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் பார்த்தீபன் என்பவர் இருந்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரூ. 3 லட்சதத்து 80 ஆயிரத்தை முகமது அசாருதீனிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் பார்த்தீபனை போலீசார் பாராட்டினர்.
    Next Story
    ×