என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்டமங்கலம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்- 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்1 Jan 2019 10:21 AM GMT (Updated: 1 Jan 2019 10:22 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது திருமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 40). விவசாயி.
இவர் புத்தாண்டையொட்டி நேற்று இரவு தனது வீட்டு வாசல் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(25), மணிகண்டன்(27) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் திடீரென்று கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தவர்கள் அருகில் விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.
ஆத்திரமடைந்த வீரப்பன் மற்றும் சிலர் முத்துராமன், மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தமோதல் குறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மோதல் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாடத்தின்போது மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது திருமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 40). விவசாயி.
இவர் புத்தாண்டையொட்டி நேற்று இரவு தனது வீட்டு வாசல் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(25), மணிகண்டன்(27) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் திடீரென்று கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தவர்கள் அருகில் விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.
ஆத்திரமடைந்த வீரப்பன் மற்றும் சிலர் முத்துராமன், மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தமோதல் குறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மோதல் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாடத்தின்போது மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X