search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே மருத்துவ பிரதிநிதி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
    X

    கோவை அருகே மருத்துவ பிரதிநிதி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

    கோவை அருகே துடியலூரில் மருத்துவ பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள துடியலூர் பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச பிரபு. மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி கவிதா. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊரான தாராபுரம் அருகே உள்ள தளவாய் பட்டினம் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட வாலிபர்கள் 2 பேர் சீனிவாச பிரபு வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன் பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை திருடினார்கள். சீனிவாச பிரபு வீட்டில் இருந்து பொருட்களை எடுக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜ் மற்றும் ஹரிஸ் ஆகியோர் அங்கு வந்தனர். இதனை பார்த்ததும் கொள்ளையர்கள் 2 பேரும் நகைகளுடன் பின்பக்க மதில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.

    அவர்கள் வந்த மொபட் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளையர்கள் விட்டு சென்ற மொபட்டை கைப்பற்றினார்கள். அதனை வைத்து நகை திருடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×